பஞ்சக்காலத்தில்…

கர்த்தர்… பஞ்சக்காலத்தில் உன் ஆத்துமாவைத் திருப்தியாக்கி… – ஏசாயா 58:11

இந்த வாக்குத்தத்தம் அநேக கிறிஸ்தவர்களைச் சந்தோஷப்படுத்துவது உண்மை. ஆனால் இது ஒரு வாக்குத்தத்தம் மட்டுமல்ல, இது ஒரு தீர்க்கதரிசனமும் கூட. வாழ்க்கையில் எப்படிப்பட்ட சூழ்நிலைகளிலும் கர்த்தர் நம் ஆத்துமாக்களைத் திருப்தியாக்கி நடத்துவார்; ஆனால் இங்கு குறிப்பாக பஞ்சக்காலத்தில் என்று கர்த்தர் சொல்கிறார். நாம் அதை கவனிக்கிறது இல்லை; ஆகவே, பஞ்சங்களும், திர்பாராத வறட்சிகளும் வரும்போது, நாம் திகைத்து நின்று விடுகிறோம்.

இந்த வாக்குத்தத்தத்தின் மூலம், வருகிற வருடத்தில் கொடிய பஞக்காலங்கள் வரும் என்று கர்த்தர் நமக்கு சொல்கிறார். பஞ்சக்காலம் என்றால், இரு வகையான பஞ்சங்களும் வரும். ஒரு பக்கம், மிகுத்இயான மழை பெய்து, தேசத்தை துவம்சம் செய்யும்; இன்னொரு பக்கம், மழையே இல்லாத வறண்ட பூமியாய், தேசம் வாடிப்போகும். இதுவும் இல்லாமல் இன்னும் அநேக சேதங்களும், பேரழிவுகளும் தேசங்களுக்கு வருகிற வருஷம் இது.

ஆனால் அதின் நடுவிலும், தம்முடைய பிள்ளைகளின் ஆத்துமாக்களைக் கர்த்தர் திருப்தியாக்கி நடத்துவார். ஆகவே, தேவ பிள்ளையே, திடன்கொள். பயப்படாதே. அதே சமயம், நீ இருக்கிற தேசத்துக்காகவும், அதில் இருக்கிற ஆத்துமாக்களுக்காகவும் ஜெபிக்க இந்த புது வருடத்திலே தீர்மானம் எடு. கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

ஏசாயா 58_11 பஞ்சக்காலத்தில்

One thought on “பஞ்சக்காலத்தில்…

  1. Pingback: உன் ஆத்துமாவைத் திருப்தியாக்கி | Glorious Ministries Blog

Leave a comment