என் தாயின் கர்ப்பத்தில் என்னைக் காப்பாற்றினீர். – சங்கீதம் 139:13
அன்பான சகோதரனே, சகோதரியே! தேவனுக்கு உன்னைத் தெரியும். இன்று அல்ல. நீ உன் வாழ்க்கையை கிறிஸ்துவுக்காக ஒப்புக்கொடுத்தபோதல்ல. நீ ஒரு பாவி என்று உணர்ந்து, தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டபோதல்ல. இல்லை, எனக்கன்பானவர்களே. உலகத்தை உருவாக்குமுன்னே, தேவன் உங்களை அறிந்து இருந்தார். நீங்கள் தாயின் கர்ப்பத்தில் உருவாகுமுன்னே, உங்களை பெயர் சொல்லி அறிந்தவர் அவர். உங்கள் தாயின் கர்ப்பத்தில் உங்களைக் காப்பாற்றி, இந்நாள் மட்டும் உங்கள்மேல் நோக்கமாயிருக்கிறவர் அவர். ஏனென்றால் அவர் உங்கள் சிருஷ்டிகர், உங்கள் பரமபிதா. தம்முடைய குமாரனாகிய இயேசுவையே உங்களுக்காகக் கொடுத்தவர். ஒரு நல்ல அப்பாவைப் போல், தேவன் உங்களைக் குறித்து, சில திட்டங்களை வைத்திருக்கிறார். உங்கள் தோல்விகள் பற்றி அவருக்குத் தெரியும். உங்கள் குறைகளும் அவருக்குத் தெரியும். ஆனாலும், உங்களுக்கு ஒரு நம்பிக்கையையும், எதிர்காலத்தையும் கொடுக்கும்படியான திட்டங்கள் அவைகள்.
ஆகவே இன்று நடக்கிற சில காரியங்கள் உன் வாழ்க்கையைத் தீர்மானிக்க விடாதிருங்கள், அன்பானவர்களே. தற்கொலை உங்களுக்கு ஒரு வழியே அல்ல. இன்று ஒருவேளை காதல் தோல்வியினால் உன் இருதயம் துவண்டு போயிருக்கலாம். ஆனாலும் இதுவும் கடந்து போகும். நீ எதிர்பார்த்த வேலை உனக்குக் கிடைக்காமல் இருக்கலாம். ஆனால் இது உன் முடிவு அல்ல. நீ கனவு கண்ட படிப்பு உனக்குக் கிடைக்காமல் இருந்திருக்கலாம். ஆனால் இது அல்ல உன் வாழ்க்கையின் முடிவு. ஒரு கதவு மூடும்போது, தேவன் உனக்காக வேறொரு கதவை நிச்சயம் திறப்பார்.
நீ தாயின் கர்ப்பத்தில் உருவாகும்போது, உன்னை அன்போடு நோக்கிப் பார்த்த அதே கண்களால், தேவன் இந்த வேளையும் உன்னை நோக்கிப் பார்த்துக்கொண்டிருக்கிறார். தேவனிடத்தில் வாருங்கள். அவர் குமாரனாகிய இயேசு கிறிஸ்துவிடம் வாருங்கள். தம் அன்பினால் அவர் உனக்கு ஆறுதல் தருவார். உன்னைப் பெலப்படுத்தி, தம் திட்டங்களை உன் வாழ்க்கையில் நிறைவேற்றுவார். நம்பி வா. ஆமென்.