தகப்பன் தான் நேசிக்கிற புத்திரனைச் சிட்சிக்கிறதுபோல, கர்த்தரும் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனைச் சிட்சிக்கிறார். – நீதிமொழிகள் 3:12
நம் கர்த்தரின் அன்பு, ஒரு தகப்பனின் அன்போடு ஒப்பிடப்படுகிறது. ஒரு நல்ல தகப்பன் தன் பிள்ளைக்குத் தேவையானதைத் தருவார். அதிலே சிட்சையும் அடங்கும். ”தண்டனை” அல்ல, சிட்சை.
1. ஒரு தகப்பன் தன் பிள்ளையை சந்தோஷமாய்ச் சிட்சிக்கிறது இல்லை. அதேப்போல் கர்த்தர் நம்மை மனப்பூர்வமாய் சஞ்சலப்படுத்துகிறது இல்லை. நமக்காகப் பரிதாபப்பட்டு, மனதுருகி, வேறு வழி இல்லாததினால், சிட்சிக்கிறவர் தான் நம் தேவன். ஆகவே, அவர் நம்மை சிட்சிக்கும்போது, நம் மனதில் அவருடைய அன்பையும், மனதுருக்கத்தையும், இரக்கத்தையும், கிருபையையும் நினைத்துக்கொள்வோம்.
2. ஒரு தகப்பன் தன் பிள்ளையை அன்போடு சிட்சிப்பானே அல்லாமல், கொடூரமாய்ச் சிட்சிக்க மாட்டான். நம் கர்த்தரும் நம்மை ஒருநாளும் கொடுமைப்படுத்த மாட்டார். சிற்சில வேளைகளில் நம் திராணிக்கு மீறி அவர் சிட்சிக்கிறதுபோல, நம் பாவங்களைக் காட்டிலும் அவர் கொடுக்கிற சிட்சை அதிகமாய் இருக்கிறதுபோலும் தெரியும். ஆனால் எல்லாவற்றிலும் தேவனின் அன்பின் கரமே நம்மை சிட்சிக்கிறது என்று நாம் மறந்துவிட வேண்டாம்.
3. ஒரு தகப்பன் தன் பிள்ளையின் நலனுக்காகவே சிட்சிக்கிறான். அப்படியே நம் கர்த்தரும் நம்முடைய நலனுக்காகவே நம்மை சிட்சிக்கிறார்.
ஆகவே, கர்த்தர் நம்மைச் சிட்சிக்கும்போது, அவர் நம்மிடத்தில் அன்பாய் இருக்கிறார் என்று அறிந்து, கர்த்தரை மகிழ்ச்சியோடு அவரை மகிமைப்படுத்துவோம். நாம் சுத்தப்பொன்னாக விளங்கும்படி அவர் செய்வாராக. ஆமென்.