செவிகொடுங்கள்

எனக்குச் செவிகொடுக்கிறவன் எவனோ, அவன் விக்கினமின்றி வாசம்பண்ணி, ஆபத்திற்குப் பயப்படாமல் அமைதியாயிருப்பான். – நீதிமொழிகள் 1:33

நீதி 1_33

இந்த ஜூன் மாதம் முதல் நாளன்று கர்த்தர் சொல்லுகிறார்: எனக்குச் செவிகொடுக்கிறவன் எவனோ, அவன் விக்கினமின்றி வாசம்பண்ணி, ஆபத்திற்குப் பயப்படாமல் அமைதியாயிருப்பான்.

நாம் அவருடைய வார்த்தைகளுக்கு செவிகொடுக்கும்போது, மூன்று காரியங்களைக் கர்த்தர் வாக்குப்பண்ணுகிறார்.

1. நீங்கள் விக்கினங்கள் இல்லாத வாழ்க்கை வாழும்படி செய்வார்.
2. ஆபத்திற்குப் பயப்படாத ஒரு வாழ்க்கை வாழ்வீர்கள். மரண இருளின் பள்ளத்தாக்கிலும், நீங்கள் பொல்லாப்புக்குப் பயப்படாதிருப்பீர்கள். சிங்கம்போல் தைரியமாய் இருப்பீர்கள்.
3. அமைதியாய் இருப்பீர்கள். எதைக் குறித்தும் மனம் சஞ்சலப்படாத வாழ்க்கை வாழ்வீர்கள்.

நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வார்த்தைக்கு செவி கொடுப்போம். கர்த்தர் அப்படியே நம்மை ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Leave a comment