நம்முடைய உருவம் இன்னதென்று அவர் அறிவார்; நாம் மண்ணென்று நினைவுகூருகிறார்.
கர்த்தர் நம்முடைய சிருஷ்டிகர்; அவரே நம்மை உருவாக்கினவர். ஆகவே அவருக்கு நன்றாகவே தெரியும் நாம் யார் என்று. நம்மைக் குறித்து தவறாக அவர் நினைக்க வாய்ப்பே இல்லை; நாம் மண்ணென்று அவர் அறிந்திருக்கிறார். மண்ணென்று அறிந்திருந்தாலும், நம்மை எவ்வளவாய் நேசிக்கிறார்! தம்முடைய சொந்த குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை தந்தருளும்படி எவ்வளவாய் அன்பு கூர்ந்திருக்கிறார். அவர் அன்பு எவ்வளவு பெரியது!!!